பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் செயலாளர் பதவி வகித்து வருகிறார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவராகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.
அதோடு விஷாலும், கார்த்தியும் சேர்ந்து ஆளுக்கு 5 கோடி கொடுப்பதாக சொன்னவர்கள், அதற்காக புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி தாங்கள் நடித்து கிடைக்கும் சம்பளத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கொடுக்கிறார்கள்.
அவர்களின் இந்த செயலைப்பார்த்து, ஆரம்பத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட இப்போது விஷால் அணியினரை பாராட்டி வருகின்றனர். அதே போல், தயாரிப்பாளர் சங்கத்திலும் நல்ல விசயங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் படங்களில் நடித்துக்கொண்டே நடிகர், தயாரிப்பாளர் சங்க பணிகளிலும் தீவிரமடைந்திருக்கிறார் விஷால்.
இந்நிலையில், அவர் கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் அவரை மேடைக்கு பேச அழைக்கும்போது நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் அவர்களை பேச அழைக்கிறோம் என்கிறார்கள். அதைக்கேட்டு விஷால் சந்தோசப்படவில்லை.
மாறாக, இப்படி சொல்வதினால் எனக்கு பயமாக இருக்கிறது. முன்பெல்லாம் நடிகர் விஷால் என்பார்கள். சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பொறுப்புகளை சொல்லி அழைக்கும் போது என்னையுமறியாமல் ஒருவித பயம் ஏற்படுகிறது என்கிறார் விஷால்..