பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காப்பிரைட்ஸ் பிரச்னை தொடர்பாக இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பாட இருந்த நேரத்தில் இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸால், இனி இளையராஜா பாடல்களை பாட போவது இல்லை என அறிவித்தார் எஸ்பிபி. இருவரையும் சமாதானம் செய்ய பலர் முயற்சித்தனர். இதை வைத்து ஒரு நீண்ட விவாதமே தமிழ் சினிமாவில் நடந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதுதொடர்பாக தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் எஸ்பிபி., கூறியிருப்பதாவது... இளையராஜா பாட்டை பாட முடியாதது கஷ்டமாகத் தான் இருந்தது. மனதளவில் பாதிப்பு இருந்தது உண்மை தான். ஆனால் நிகழ்ச்சி பாதிக்கப்படவில்லை, கடவுள் புண்ணியத்தில் மற்றவர்களின் இசையில் நிறைய பாடல்களை பாடியதால் அந்த பாடல்களை பாடினேன்.
இந்தியாவில் காப்பிரைட்ஸ் சட்டம் கொஞ்சம் சிக்கலானது. எனக்கு அதைப்பற்றி அவ்வளவாக தெரியாது. இளையராஜா பதிவு செய்திருப்பதும் சத்தியமாக எனக்கு தெரியாது. இரண்டாண்டுகளாக நான் கச்சேரி செய்கிறேன். அப்போது எல்லாம் எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால் எப்படி இப்படி ஒரு பிரச்னை வந்தது என்று தெரியவில்லை. பாடல்களுக்கான உரிமையை பெற இளையராஜாவுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நோட்டீஸ் அனுப்பும் முன் நண்பர் என்ற முறையில் என்னிடம் ஒருவார்த்தை பேசியிருக்கலாம். நண்பராக இருந்துவிட்டு இளையராஜா அப்படி செய்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
சினிமாவில் வருவதற்கு முன்பே நானும், இளையராஜாவும் நண்பர்கள். வாடா போடா என்று பேசக்கூடிய அளவிற்கு நல்ல நண்பர்கள். எப்படி இந்த பிரச்னை தீர்வாகும் என்று தெரியவில்லை. காலம் தான் தீர்க்க வேண்டும். இப்போதும் இளையராஜாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் நம்பியிருப்பது இசையையும், ரசிகர்களை தான். எந்த பாடலையும் என் சொந்தம் என்று நினைத்தது கிடையாது. இளையராஜா நன்றாக இருக்கணும், இன்னும் என் போன்ற நிறைய பாடகர்களுக்கு அவர் வாழ்க்கை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்பிபி., கூறியிருக்கிறார்.