வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 'கத பறயும்போல்'..மம்முட்டி கெஸ்ட் ரோலில் சூப்பர்ஸ்டார் கேரக்டரில் நடிக்க, சீனிவாசன்-மீனா கணவன் மனைவியாக நடித்திருந்தனர்.. மோகனன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன் சலூன் கடை வைத்திருக்கும் பாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இந்தப்படத்தைத்தான் தமிழில் குசேலன்' என ரஜினி-பசுபதியை வைத்து ரீமேக் செய்தார் பி.வாசு... மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப்படம் தமிழில் வெற்றிபெற தவறியது.
இப்போது மலையாளத்தில் சீனிவாசன்-மீனா கதாபாத்திரங்களுக்கு 'வீண்டும் கத பறயும்போல்' படத்திற்காக மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ்.. சீனிவாசன்-மீனா இருவருமே இதில் நடித்துள்ளனர். ஆனால் இந்தப்படம் கத பறயும்போல்' படத்தின் இரண்டாம் பாகமும் அல்ல.. அதேசமயம் இது ஒரு முழுநீள சினிமாவும் அல்ல. அரைமணி நேரமே ஓடும் டாக்குமென்ட்ரி படமாக இது உருவாகியுள்ளது. ESFA வங்கிக்காக உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி படம் தான் என்றாலும் 'கத பறயும்போல்' சினிமாவில் காட்டப்பட்ட அந்த மேலுகாவு கிராமத்தையே மீண்டும் உருவாக்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளார் லால்ஜோஸ்.