வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி உயர்ந்து நிற்கிறார். அதை பாகுபலி 2 படம் இன்னும் மாற்றி வைக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகுபலி படத்திற்கு முன்பு ராஜமௌலியும் வழக்கமான கமர்ஷியல் இயக்குனராகத்தான் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அவரது இயக்கத்தில் வந்த மகதீரா, நான் ஈ ஆகிய படங்கள் பாகுபலி படத்திற்கு முன்பே அவரைப் பற்றிப் பேச வைத்தன.
இப்போது ராஜமௌலி இயக்கத்தில் பலரும் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் கூட வெளிப்படையாகவே ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று அறிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் விஜய் நடித்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பு 2004ம் ஆண்டே ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தாணு, ராஜமௌலியை அப்போது தேடிச் சென்று விஜய்யை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அப்போது அவரது கைவசம் வேறு சில படங்கள் இருந்ததால் விஜய்யை வைத்து இயக்க முடியாமல் போனது என்ற தகவலை தயாரிப்பாளர் தாணு, பாகுபலி 2 இசை வெளியீட்டின் போது தெரிவித்திருக்கிறார்.
இப்போது ராஜமௌலியும், விஜய்யும் சேர்ந்தால் அது கண்டிப்பாக தமிழில் அதிக வசூலைப் பெறும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.