டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கத்தி' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். கடந்த வருடம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கம் உட்பட ஏறக்குறைய அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்துவிட்டன. சில விடுபட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலே இருந்தது மகேஷ் பாபுவின் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இயக்குனர் முருகதாஸ் மீது காட்டமாக இருந்தனர். விரைவில் படத்தின் முதல் பார்வையையும், படத்தின் தலைப்பையும் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இனிமேலும், தாமதித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த முருகதாஸ், நாளை படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிட உள்ளார்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ஒரே தலைப்புதான் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. நாளைய தலைப்பு பற்றிய எதிர்பார்ப்பு மகேஷ்பாபு ரசிகர்களிடம் இப்போதே அதிகமாகியுள்ளது. அவர்கள் விரும்பும் தலைப்பாக அது அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.