இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகில் 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து 90களின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 'ஓ அந்த நாட்கள்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்து, மீண்டும் தெலுங்குப் படத்தில் இன்று முதல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குஷ்பு தெலுங்கு சினிமாவில் நடித்து சுமார் 10 வருடங்கள் ஆகிவிட்டது.
“த்ரிவிக்ரம், பவன்கல்யாண் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறேன். பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் போல் உள்ளது. பல விஷயங்களைக் கற்க வேண்டும்,” என்று குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருப்பதை தெலுங்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளார்கள்.