இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அவ்வப்போது திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவே, தமிழகத்தை உற்று நோக்கி கவனிக்க தொடங்கியுள்ளது. அரசியல் மாற்றம் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழகம் போராட்ட களமாகவும் மாறி வருகின்றன.
தமிழக அரசியல் பற்றியும், தமிழகத்தில் நடக்கும் செயல்கள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்தை தைரியமாக பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், நடிகர் கமல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை டில்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது கமலுக்கு, பொன் ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்தார்.
டில்லியில் கமல் என்னை சந்தித்தார், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பொன் ராதாகிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.