'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுதேவா தற்போது நடித்து வரும் படம் எங் மங் சங். வாசன்ஸ் விஷூவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். எம்.எஸ்.அர்ஜுன் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
இதில் லட்சுமி மேனன், தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் கும்பகோணம் பகுதியில் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் பிரபுதேவா பாடலாசிரியராகி இருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் அர்ஜுன் கூறியதாவது:
படத்தில் ஒரு பிரமாண்ட திருவிழா பாடல் வருகிறது. அதை பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டிருந்தோம். அதற்கான பாடலை ஒரு பிரபலமான பாடலாசிரியரை கொண்டு எழுத நினைத்திருந்தோம். அந்த பாடலில் என்னென்ன விஷயங்கள் வரவேண்டும் என்று பிரபுதேவா, சில யோசனைகள் சொன்னார். பேசாமல் நீங்களே எழுதிவிடுங்களேன் என்றேன். முதலில் தயங்கினார். பிறகு எழுதிக் கொடுத்தார் நான் நினைத்ததை விட பிரமாதமாக இருந்தது.
"அய்யனாரு வந்துட்டாரு இங்க பாரு..." என்று தொடங்கும் அந்த பாடலுக்கு அம்ரீஷ் பிரமாதமாக இசை அமைத்திருக்கிறார். சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். 150 நடன கலைஞர்கள் ஆட ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். திருவிழா ஷெட்டில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்றார் இயக்குனர் அர்ஜுன்.