600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சமுத்திரகனி இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்த 'அப்பா' கடந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த படம். தமிழில் வர்த்தக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தை மலையாளத்திலும் ரீ-மேக் செய்து வருகிறார். 'ஆகாசமிட்டாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில நாட்களிலேயே வரலட்சுமி சரத்குமார் ஆகாசமிட்டாய் படத்திலிருந்து விலகிவிட்டார். இது சம்பந்தமாக வரலட்சுமி சரத்குமார் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஆணாதிக்க பிரச்சனைகளால் 'ஆகாசமிட்டாய்' படத்திலிருந்து விலகுகிறேன்'' என்று ட்வீட் செய்திருந்தார்.
உண்மையில் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்க மறுத்து சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க சொன்னதால் தான் வரலட்சுமி விலகினார். வரலட்சுமி விலகியதை தொடர்ந்து இப்போது அந்த கேரக்டரில் இனியா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.