டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'கபாலி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். தனுஷ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. இப்படத்தை குறுகிய கால படைப்பாக உருவாக்க போவதாக தகவல். அனேகமாக இந்த ஆண்டிற்குள் படத்தை முடித்து விடுவார்கள் என்கிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்கிய படத்திற்குப் பிறகு 'பாகுபலி' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற 'பாகுபலி 2' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் “ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆவல். நிச்சயம் விரைவில் அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் ரஜினி கூட ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று பேசியுள்ளார்.
'பாகுபலி 2' வெளியீட்டிற்குப் பிறகு ராஜமௌலி ஓய்வெடுக்கச் செல்வார் என்றும், அதன் பின் அவர் ரஜினி நடிக்கும் கதையை எழுதலாம் என்றும் தெரிகிறது. அதற்குள் ரஜினியும், ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிடுவார். எல்லாம் சரியாகக் கூட வந்தால் அடுத்த ஆண்டில் ராஜமௌலி - ரஜினிகாந்த் என்ற பிரம்மாண்ட புதிய கூட்டணியை எதிர்பார்க்கலாம்.