தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறார் நடிகை சோனாக்ஷி. அகிரா படத்தை அடுத்து சோனாக்ஷி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛நூர்'. இதில் சோனாக்ஷி, பத்திரிகையாளராக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சுனில் சிப்பி இயக்கி உள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சோனாக்ஷியிடம், பாலிவுட்டில் எதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த சோனாக்ஷி...
‛‛ஒரே ஒரு விஷயத்தை தான் மாற்ற நினைக்கிறேன், அது நடிகைகளின் சம்பளம் தான். நாங்கள் எல்லோரும் நடிகர்கள், வயது வித்தியாசமின்றி அனைவரும் நடிக்கின்றனர். இன்றைக்கு பெண்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. ஆகையால் நடிகர்களுக்கு சமமான சம்பளத்தை நடிகைகளுக்கும் வழங்க வேண்டும், அதில் பாரபட்சம் காட்ட கூடாது'' என்று கூறியிருக்கிறார்.
நூர் படம் வருகிற ஏப்., 21-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.