ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'காற்று வெளியிடை'. மணிரத்னம் இயக்கிய ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு விமர்சனம் வந்திருக்குமா என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்திற்கு பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் ரசிகர்கள் இது மற்றுமொரு 'மணி ஸ்டைல்' படம் என்றும், மற்றவர்கள் படத்தில் எதிர்பார்த்த எதுவும் இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள்.
இதனிடையே, இந்தப் படம் கொரியன் சீரியலான 'டிசென்டன்ட்ஸ் ஆப் த சன்' என்பதின் காப்பி என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தொடரின் நாயகன் ராணுவத்தில் இருப்பவர், நாயகி ஒரு டாக்டர், இருவருக்கும் இடையிலான காதல் தான் இந்தத் தொடர். இத்தொடருக்கும், 'காற்று வெளியிடை' படத்திற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது என கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
அதேசமயம், 'காற்று வெளியிடை' படம் 1971-ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெற்ற போரில் போர்க் கைதியாக பாகிஸ்தானிடம் சிறைபட்டு தப்பி வந்த டி.கே. பருல்கர் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம் என ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை இப்படத்தைத் தயாரித்துள்ள மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் ரீ-டிவீட் செய்துள்ளது.
மணிரத்னம் படம் வந்தாலே அதைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாக வருவது வழக்கம். அப்படித்தான் இப்படத்திற்கும் வருகிறது என்கிறார்கள் மணிரத்னத்தின் நெருங்கிய வட்டாராம். விமர்சனங்களையும் தாண்டி படத்தின் முதல் வார இறுதி வசூல் திருப்திகரமாகவே இருக்கிறது என்கிறார்கள்.