இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் விக்ரம் பிரபு தனது முதல் தயாரிப்பாக தயாரித்துள்ள படம் ‛நெருப்புடா. இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். விக்ரம்பிரபு உடன் நிக்கி கல்ராணி, வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மணின் உதவியாளர் அசோக் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்தில் விமரிசையாக நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெருப்புடா இசையை வெளியிட்டார்.
பின்னர் பேசிய ரஜினிகாந்த்... ‛‛நடிகர் சிவாஜிக்கு எப்போதும் யாருமே போட்டி கிடையாது. சிவாஜியை மனதில் நினைத்து தான் அண்ணாமலை படத்தில் நடித்தேன். படம் அருமையாக வந்திருந்தது. அண்ணாமலை படத்தை பார்த்துவிட்டு சிவாஜி என்னை பாராட்டினார். தாத்தா சிவாஜி மற்றும் அப்பா பிரபுவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் விக்ரம் பிரபுவிடம் இருக்கிறது. நிச்சயம் அவர் செய்வார் என நம்புகிறேன். விஷால் சொன்னது போன்று படம் வெளிவந்த உடனேயே விமர்சனம் செய்யாதீர்கள். அவரின் கோரிக்கை நியாயமானது தான். விமர்சனத்தில் பயன்படுத்துகிற வார்த்தை கண்ணியமாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தும்படி விமர்சனம் செய்யாதீர்கள் என்றார்.