ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகள், பாடல்கள் சம்பந்தமான ராயல்டியை உரிய நபர்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதுதான் ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு. தி இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி என்பது இதன் விரிவாக்கமாகும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த இந்த அமைப்பு அதன் பிறகு செயல்படவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் இந்த அமைப்பில் நடத்தப்பட்ட தேர்தலில் எழுத்தாளர் ஜாவித் அக்தர் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த ராயல்டி அமைப்பின் உறுப்பின ராக தேர்வாகியிருக்கிறார். விளைவு, சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் இளைய ராஜா-எஸ்.பி.பி., உள்பட பலருக்கிடையே நடைபெற்று வரும் ராயல்டி சம்பந்த மான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஈடுபடுவார் என்று தெரிகிறது.