'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகள், பாடல்கள் சம்பந்தமான ராயல்டியை உரிய நபர்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதுதான் ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு. தி இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி என்பது இதன் விரிவாக்கமாகும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த இந்த அமைப்பு அதன் பிறகு செயல்படவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் இந்த அமைப்பில் நடத்தப்பட்ட தேர்தலில் எழுத்தாளர் ஜாவித் அக்தர் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த ராயல்டி அமைப்பின் உறுப்பின ராக தேர்வாகியிருக்கிறார். விளைவு, சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் இளைய ராஜா-எஸ்.பி.பி., உள்பட பலருக்கிடையே நடைபெற்று வரும் ராயல்டி சம்பந்த மான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஈடுபடுவார் என்று தெரிகிறது.