பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகள், பாடல்கள் சம்பந்தமான ராயல்டியை உரிய நபர்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதுதான் ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு. தி இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி என்பது இதன் விரிவாக்கமாகும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த இந்த அமைப்பு அதன் பிறகு செயல்படவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் இந்த அமைப்பில் நடத்தப்பட்ட தேர்தலில் எழுத்தாளர் ஜாவித் அக்தர் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த ராயல்டி அமைப்பின் உறுப்பின ராக தேர்வாகியிருக்கிறார். விளைவு, சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் இளைய ராஜா-எஸ்.பி.பி., உள்பட பலருக்கிடையே நடைபெற்று வரும் ராயல்டி சம்பந்த மான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஈடுபடுவார் என்று தெரிகிறது.