டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1939ம் ஆண்டு வெளியான படம் தியாகபூமி, சினிமாவுக்கென்றே கல்கி எழுதிய கதையை கே.சுப்பிரமணியம் இயக்கினார். இதில் கே.ஜே.மகாதேவன், பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலட்சுமி உள்பட பலர் நடித்தார்கள்.
வெளிநாட்டில் படித்து அங்கேயே வேலை பார்க்கும் ஹீரோ தன் தாயின் வற்புறுத்தலால் ஒரு கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு வெளிநாட்டு காதலி ஒருத்தியும் இருக்கிறார். அதன் பிறகு கிராமத்து பெண் என்ன நிலைமைக்கு ஆளாகிறார் என்கிற கதை.
இந்தப் படம் வெளிவந்த சில நாட்களிலேயே படத்துக்கு ஆங்கில அரசு தடைவிதித்தது. காரணம் அப்போது சுந்திர போரட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்து. படத்தில் சுதந்திர வேட்கையை தூண்டும் பாடல்கள் இடம்பெற்றிருந்தது.
படத்துக்கு ஆங்கில அரசு தடைவிதிக்கிறது என்பதை அறிந்த தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன் படத்தை மக்களுக்கு இலவசமாக திரையிட்டார். இடைவெளியில்லாமல் படம் ஓடிக் கொண்டே இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டாக சென்று இலவசமாக பார்த்தனர். ஆங்கில அரசு படத்தை தடை செய்தது. அதன்பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததும் மீண்டும் படம் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.