'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
64-வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டன. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவின் சித்தி மகன் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
ஜோக்கர் படத்தில் ஜாஸ்மீன் என்ற பாடலைப் பாடிய சுந்தர் ஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருது கிடைத்தது. சூர்யா தயாரித்து இயக்கிய 24 படத்தின் ஒளிப்பதிவாளர் திருவுக்கும், தயாரிப்பு வடிவமைப்புக்கும் 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேசிய விருதுக் குழுவை கடுமையாக சாடியுள்ளார் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். யுடிவியில் பணியாற்றிய தனஞ்செயனுக்கு சிறந்த சினிமா விமர்சகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
"தேசிய விருதுக் குழுவில் உள்ளவர்களின் செல்வாக்கும் பாரபட்சமும் தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு தலைபட்சமானதே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமல்ல, வேறு பலரும் தேசியவிருது அறிவிப்புக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இப்படி பலரும் அதிருப்தி தெரிவிக்க என்ன காரணம்?
தேசிய விருது தேர்வுக்குழுவில் ஜூரியாக இருந்தவர் மலையாளப்பட இயக்குநர் ப்ரியதர்ஷன். அவருடைய உதவியாளரான இயக்குநர் ஏ.எல்.விஜய் மூலம் ப்ரியதர்ஷனை சந்தித்த சிலருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் காரணமாகவே ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்கள் தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. இது ஒரு பக்கம் இருக்க, வனமகன் படத்தை இயக்கி வரும் ஏ.எல்.விஜய் விரைவில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்பது உப தகவல்.