'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ நடிக்க 2006 ஆம் ஆண்டு வெளியான படம் - இம்சை அரசன் 23ம் புலிகேசி. பெரும் வரவேற்பைப் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பிறகு படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார் சிம்புதேவன்.
விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி படு தோல்வியை சந்தித்த தன்னுடைய உதவியாளரான சிம்புதேவனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார் இயக்குநர் ஷங்கர். வடிவேலுவுக்கு குறிப்பிட்ட ஒரு சம்பளம் பேசப்பட்டது.
அந்த சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டார் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது தெரிந்தததும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க முன் வந்தது.
இதை அறிந்ததும் வடிவேலு, அதாவது, ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்ட சம்பளத்தைவிட மூன்று மடங்கு சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அவருடைய இந்த பேராசையைக் கண்டு இயக்குநர் சிம்புதேவன் கடுப்பாகிவிட்டாராம். படத்தை தயாரிக்கும் ஷங்கரோ... இந்த படத்தை ட்ராப் பண்ணிவிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம். அல்லது வடிவேலுவுக்கு பதில் சூரியை வைத்து எடுக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாராம். இம்சை அரசனாக சூரி நடிக்கலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.