பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த ஆண்டில் தொடரி, கொடி படங்களில் நடித்த தனுஷ், இந்த ஆண்டில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பா.பாண்டி, விஐபி-2, வடசென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், அவர் இயக்கி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள பா.பாண்டி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில் நாயக னாக நடித்த ராஜ்கிரண் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஜ்கிரண், இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் தான் நடித்திருப்பதைப் பற்றி ராஜ்கிரண் கூறுகையில், தனுசுக்கு பா.பாண்டி முதல் படம் மாதிரியே இல்லை. காரணம் முதல் பட டைரக்டர்கள் ஸ்பாட்டில் டென்சனாக இருப்பார்கள். ஆனால் தனுஷிடம் எந்த டென்சனும் இல்லை. ரொம்ப தெளிவாக காணப்பட்டார். ஒவ்வொரு காட்சிகளிலும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தான் உணர்வுப்பூர்வமாக நடித்துக்காட்டியே வேலை வாங்கினார். அவர் என்ன நடித்துக்காட்டினாரோ அதைத்தான் நாங்களெல்லாம் செய்திருக்கிறோம். மொத்தத்தில், தனுஷ் படம் இயக்குவதை ஒரு ரசிகனாக ரசித்தபடியே நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் ராஜ்கிரண்.