Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 மூத்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் வழங்குகிறார் விஜய சேதுபதி!

09 ஏப், 2017 - 09:29 IST
எழுத்தின் அளவு:
Director-SP-Jananathan-press-meet--with-vijayasethupathi

உலகாயுதா பவுன்டேஷன் சார்பில் நூற்றாண்டு கண்ட சினிமாவில் 100 மூத்த தொழிலாளர்க ளுக்கு தலா ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கம் வழங்குகிறார் நடிகர் விஜயசேதுபதி. வருகிற மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தன்று இந்த தங்கம் வழங்கும் விழா நடைபெறுகிறது.


இதுசம்பந்தமாக நேற்று மாலை நடிகர் விஜயசேதுபதி, டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது விஜயசேதுபதி கூறுகையில்,


இந்த உலகாயுதா பவுண்டேஷனை தொடங்கியவர் எஸ்.பி.ஜனநாதன் சார்தான். அதன்மூலம் 100 மூத்த சினிமா தொழிலாளர்களுக்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டிருப்பதாக அவர் சொன்னபோது, நானே கொடுக்கிறேன் என்று கூறினேன்.


எனக்கு எல்லாமே சினிமாதான். சினிமாதான் எனக்கு எல்லாமே கொடுத்தது. இந்த சினிமாவில் இருக்கிற டெக்னீசியன்கள் எனக்கு நிறையவே பண்ணியிருக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து அனுபவித்துள்ளேன். கடந்த கால சினிமாவைப்பற்றி லைட்மேன்களிடம் கேட்டு தெரிந்திருக்கிறேன். எனக்கு கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய நன்றிக்கடனாக இதை நினைக்கிறேன். அதுக்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக்கொள்கிறேன்.


இது சம்பந்தமாக பெப்சியில் உள்ள 23 தொழிற் சங்கங்களுக்கும் நாளை ஒரு கடிதம் அனுப்பு கிறோம். நாளை இரண்டாவது ஞாயிறு என்பதால் எல்லா தொழிற் சங்கங்களிலும் செயற்குழு கூட்டம் நடக்கும். அப்போது எங்களது குழுவினர் அங்கே சென்று மூத்த மூன்று உறுப்பினர்களை செலக்ட் பண்ணுமாறு கடிதம் கொடுப்பார்கள். அவர்களிடம் எல்லா ரெக்கார்டும் இருக்கும். அந்தவகையில் மூத்த தொழிலாளர்கள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் கொடுக்கிறோம்.


மேலும்,சினிமாவில் பிலிம் என்பது போய் டிஜிட்டல் வந்த பிறகு நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு இல்லை. அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டி ருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. உலகத்திலேயே ஹாலிவுட்டுக்குப்பிறகு இந்தியா சினமாவில்தான் பிலிம் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அப்படி யென்றால் எத்தனையோ லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது வேலை இல்லை. அவர்களையெல்லாம் யூனியன்கள் மூலம் தேடிப்போகிறோம். மே1-ந்தேதியான உழைப்பாளர் தினத்தன்று இந்த தங்கம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. நான் சின்னதாக பிச்சிதான் கொடுக்கிறேன். இது பெரிய விசயமல்ல. ஆனால் நூற்றாண்டு சினிமாவில் நூறு கலைஞர்களுக்கு தங்கம் கொடுப்பதை ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கிறோம் என்கிறார் விஜயசேதுபதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in