ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இப்போதைக்கு எனக்கு எந்தவித இமேஜூம் கிடையாது. அதனால் நல்லதாக இருந்தால் எந்தமாதிரியான வேடத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் செளந்திரராஜா.
அவர் கூறுகையில், தற்போது நான் ஹீரோவாக நடித்துள்ள ஒரு கனவு போல, வில்லனாக நடித் துள்ள தங்கரதம் ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஏப்ரல் 24-ந்தேதியே திரைக்கு வரவேண்டிய இந்த படங்கள் தியேட்டர் பிரச்சினை காரணமாக திரைக்கு வராமல் உள்ளன. மேலும், ஹீரோவாக நடிக்கும்போதே வில் லனாகவும், கேரக்டர் ரோல்களிலும் நான் நடித்து வருவதைப்பார்த்து, இதனால் ஹீரோ இமேஜ் பாதிக்காதா? என்று சிலர் கேட்கிறார்கள். என்னைக்கேட்டால், எனக்கெல்லாம் எந்த இமேஜூம் கிடையாது.
ரஜினி சார் பெரிய ஸ்டார். அவர் இப்படித்தான் பண்ணனும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஆடியன்ஸ் எதிர்பார்க்கிற அளவுக்கு செளந்தர்ராஜா பெரிசாக இல்லை. ரஜினி, சத்யராஜ் போன்றோர் பல படங்களில் வில்லனாக பண் ணித்தான் ஹீரோ ஆனார்கள். ஹீரோ ஆனபிறகும் வில்லனாக நடித்தார்கள்.
அந்தவகையில், சுந்தரபாண்டியன் வரும்போது என்னை திட்டினார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வந்தபோது காமெடியனாக பார்த்து சிரித்தார்கள். ஜிகர்தண்டா வந்தபோது ஏதோ வில்லத்தனம் பண்றான் என்பது மாதிரி பார்த்தனர். அந்த வகையில், தற்போது திருட்டுப்பயலே-2வில் போலீசாக நடிக்கிறேன். சத்ரியன், தொண்டன், விஷ்ணுவுடன் ஒரு படத்தில் காமெடி வில்லனாக நடிக்கிறேன். இதுதவிர மறுபடியும் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறேன். இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து என்னை நல்ல நடிகனாக தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு என் திறமைக்கு தீனி வேண்டும் அவ்வளவுதான் என்கிறார் செளந்தரராஜா.