விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
64வது தேசிய விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்து நேற்று தேசிய விருதுகளை அறிவித்தார் பிரியதர்ஷன். அறிவிக்கப்பட்ட உடனேயே விருதுகள் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களைப் பகிர ஆரம்பித்தனர். இவருக்கு விருது இல்லையா, அவருக்கு விருது இல்லையா என சமூக வலைத்தளங்களில் தங்களையே தேர்வுக் குழுவாக நினைத்து பலரும் பலருக்கு விருது கிடைத்திருக்கலாம் என பரிந்துரை செய்தார்கள்.
அதிலும் சிறந்த நடிகருக்கான தேர்வுக்கு அக்ஷய் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வட இந்திய ஊடகங்கள் பலவும் கடுமையாக விமர்சனம் செய்தன. பிரியதர்ஷன், அக்ஷய்குமார் இருவரும் நண்பர்கள் என்பதால் அக்ஷய் குமாருக்கு விருது கிடைத்தது என்று செய்திகளும் வெளியாகின. பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் “ஹெரா பேரி, கரம் மசாலா, பாகம் பாக், பூல் புலையா, டே டனா டான், கட்டா மீட்டா” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆமீர் கான் நடித்த 'தங்கல்' படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது அளித்திருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்குப் பின் அளித்த பேட்டி ஒன்றில் தேசிய விருது விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கும் ஆமீர்கானுக்கு எதற்கு தேசிய விருது என்று பிரியதர்ஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தாரே ஜமீன் பர்' படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்ட போது அந்த விழாவில் ஆமீர்கான் கலந்து கொள்ளவில்லை. அதோடு, விருதுகள் விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெளிவாக அறிவித்தவர் ஆமீர்கான். தேசிய விருது போன்றவற்றை ஏற்க மனமில்லாத போது எதற்கு அப்படிப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் விருதுகளை திருப்பி வழங்குவதைப் பார்க்கிறோம். அதனால்தான் அப்படிப்பட்ட சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்தோம்.
என்னை மட்டும் பலர் கேள்வி கேட்பதன் காரணம் புரியவில்லை. அக்ஷய் என்னுடைய நண்பர் என்பதால்தான் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்ற கமெண்ட்டுகளை நானும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
ரமேஷ் சிப்பி தலைவராக இருந்த போது அமிதாப்பச்சன் தேசிய விருது பெற்றார். பிரகாஷ் ஜா தலைவராக இருந்த போது அஜய் தேவகன் விருது பெற்றார். அப்போதெல்லாம் எழாத கேள்வி இப்போது நான் தலைவராக இருக்கும் போது மட்டும் எழுவது ஏன்,” என்றும் பதிலுக்கு பிரியதர்ஷன் கேள்வி எழுப்புகிறார்.
பிரியதர்ஷன் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.