‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டண்ட் மாஸ்டருக்கான முதல் தேசிய விருதை இந்தியா முழுக்க பிரபலமான ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது மகிழ்ச்சி குறித்து பீட்டர் ஹெய்ன் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு... தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200 படங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். 63 ஆண்டுகளில் முதன்முறையாக சண்டைக்காட்சிக்கு தேசிய விருது வழங்குகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை அங்கீகாரம் செய்தது பெருமையாக இருக்கிறது. இந்த பெருமை எல்லாம் மோகன்லாலை தான் சேரும். ஏனென்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அதை திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியவர் அவர் தான். பொதுவாக மலையாளத்தில் ஒரு படம் சுமார் ரூ.7-8 கோடியில் தான் உருவாகும். ஆனால் என்னால் புலி முருகன் படத்தின் பட்ஜெட் ரூ.18 கோடியாக எகிறியது. ஆனால் அதையும் விட படம் அதிக வசூலை கொடுத்து மலையாள சினிமாவையே வியக்க வைத்தது. இதுபோன்ற விருதுகள், இன்னும் பல நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நான் சீனா மற்றும் வியட்நாம் மொழியில் ஒரு படத்தை இயக்கி வருகிறேன். படத்திற்கு சாம்ஹை என்று பெயரிட்டுள்ளேன். தவறுகளை வெளிப்படுத்தும் விதம் என்பது இதன் அர்த்தம். இருநாட்டு கலைஞர்களும் நடிக்கிறார்கள். இது ஒரு குடும்ப படம். ஒரு குடும்பத்தில் நடக்கும் பாச போரட்டத்தை சொல்கிற படம். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது வியட்நாம் செல்கிறேன், அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து மீதமுள்ள படப்பிடிப்புகளை முடிக்க உள்ளேன். ஆங்கிலம், சீனா மற்றும் வியட்நாம் மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர முருகதாஸ் இயக்கும் மகேஷ் பாபு படத்திலும் பணியாற்றுகிறேன் என்றார்.