தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். தனது முதல் படமான பகல் நிலவு தொடங்கி தளபதி வரை அவர் இயக்கிய அத்தனை தமிழ் படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்தார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. இப்போதும் இவர்களது பாடல்கள் திகட்டாத இன்ப ராகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.
ஆனால் தளபதி படத்திற்கு பிறகு இளையராஜாவை விட்டுவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் கூட கைகோர்த்தார் மணிரத்னம். ரோஜாவில் ஆரம்பித்த இந்த கூட்டணி தற்போடது காற்று வெளியிடை வரை 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இளையராஜா - மணிரத்னம் இடையே என்ன பிரச்னை என்று தெரியவில்லை, ஆனால் இந்த கூட்டணி மீண்டும் இணையாதா...? என்று ஏங்காதா ரசிகர்கள் இல்லை. இந்நிலையில் தனக்கு இளையராஜாவுடன் பணியாற்ற எந்த தயக்கமும் இல்லை என்று கூறியிருக்கிறார் மணிரத்னம்.
இதுதொடர்பாக தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மணிரத்னம் கூறியிருப்பதாவது... இளையராஜாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். நான் முதன்முதலாக படம் இயக்கும்போது அவரிடம் நின்றபோது எந்த தயக்கமும் இன்றி சம்மதம் சொன்னார். அவரால் தான் இசையில் உள்ள விஷயங்களை கற்று கொண்டேன். அவர் ஒரு ஜீனியஸ். இளையராஜா இசையை கேட்டு வளர்ந்தவன் நான். இப்போதும் அவரது இசையை ரசிக்கிறேன்.
இளையராஜா மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். நாங்கள் இணைவதற்கான நல்ல வலுவான கதைக்களம், சூழல் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் நிச்சயம் அவருடன் பணியாற்றுவேன், எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஆனால் அது எப்போது நடக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.