‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. தமிழில் அவர் இயக்கி வெளிவரும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' படம் கூட நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், நேற்று தமிழில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தெலுங்கில் 'செலியா' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கான விமர்சனங்களும் வரவேற்பும் குறைவாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படங்கள் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று தெரிவிக்கிறார்கள். தமிழில் வரவேற்பைப் பெற்ற பாடல்கள், தெலுங்கில் வரவேற்பை பெறாததும் படத்தின் மோசனமாக வரவேற்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன.
தமிழில் விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் இங்கு படம் தப்பித்துவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம். அதே சமயம், தெலுங்கில் இப்படம் மோசமான தோல்வியைத் தழுவும் என்கிறார்கள்.
கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தாலும், அவரை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை என்பது படத்திற்கு மைனஸ் பாயின்டாக் அமைந்துவிட்டது.