டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. தமிழில் அவர் இயக்கி வெளிவரும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' படம் கூட நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், நேற்று தமிழில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தெலுங்கில் 'செலியா' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கான விமர்சனங்களும் வரவேற்பும் குறைவாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படங்கள் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று தெரிவிக்கிறார்கள். தமிழில் வரவேற்பைப் பெற்ற பாடல்கள், தெலுங்கில் வரவேற்பை பெறாததும் படத்தின் மோசனமாக வரவேற்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன.
தமிழில் விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் இங்கு படம் தப்பித்துவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம். அதே சமயம், தெலுங்கில் இப்படம் மோசமான தோல்வியைத் தழுவும் என்கிறார்கள்.
கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தாலும், அவரை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை என்பது படத்திற்கு மைனஸ் பாயின்டாக் அமைந்துவிட்டது.