டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி வரை சென்று வெற்றி பெற்றவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது மகேஷ்பாபுவை வைத்து தமிழ்-தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜோக்கர், 24 படங்கள் தலா 2 விருதுகளும், எழுத்தாளர் தனஞ்செயன் மற்றும் சிறந்த பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து என மொத்தம் 6 விருதுகள் தமிழுக்கு கிடைத்தன.
இந்நிலையில் தேசிய விருது கமிட்டியை விமர்சனம் செய்திருக்கிறார் ஏஆர்.முருகதாஸ். முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சிபாரிசுகளின் பேரில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. தேர்வுகுழு பாரபட்சமாக செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தேசிய விருது தேர்வு கமிட்டின் தலைவராக தென்னிந்திய புகழ் இயக்குநர் பிரியதர்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது.