சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளார். நடிகர் ரஜினி, ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 1998ல், சந்திப்பு முடிந்து திரும்பிய சில ரசிகர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். பின், பிறந்தநாளின் போது மட்டும், வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, 2008 வரை நடந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினி வரும், 12 முதல், 17 வரை, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க இருக்கிறார். சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வு நடக்க இருந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக கடந்த ஏப்., 2-ம் தேதி கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா மற்றும் நிர்வாகி சுதாகரன் தலைமையில், கூட்டம் நடந்தது. அதில், மாவட்ட வாரியாக, ரசிகர்களை ரஜினி சந்திக்கும் நாட்கள், சந்திப்பின் போது, ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விவாதிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களை சந்திக்காமல் புறக்கணித்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக ரத்து செய்துள்ளார் ரஜினி. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார் ரஜினி.
இதுதொடர்பாக ரஜினி வெளியிடப்பட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பாதவது... ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கு ஒரு தகவல், உங்களை சந்தித்து, உங்களுடன் போட்டோ எடுத்து 10 ஆண்டுகளாகிவிட்டது. சரியான வாய்ப்பும், நேரமும் இல்லாததால் அது நடக்க முடியாமல் போய்விட்டது. வருகிற ஏப்., 12 முதல் 16ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. சுமார் 1500-200 பேரை சந்தித்து போட்டோ எடுத்து விருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், தற்போது அந்த சந்திப்பை நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகையால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும்காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்படும், இதுப்பற்றி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரும் என்னை புரிந்து கொள்வீர்கள், ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன், நன்றி.
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.