Advertisement

சிறப்புச்செய்திகள்

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிஜமாகவே கழுத்தை நெறித்தார் நயன்தாரா: டோரா வில்லன் சொல்கிறார்

08 ஏப், 2017 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-really-attck-dora-villains-neck

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் டோரா. இதில் 3 வடநாட்டு ஆசாமிகள்தான் வில்லன். அந்த வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார் வெற்றி. பாணிபூரி விற்பவராக வந்து 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து நயன்தாராவால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுகிற கேரக்டர். கடந்த 17 ஆண்டுகளாக சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வெற்றிக்கு நயன்தாரா கையால் கழுத்து நெறிபட்டு செத்தது பெருமையாக இருக்கிறதாம். அவர் மேலும் கூறியதாவது:


எனக்கு சினிமா மீது ஆசை, ஆர்வம், மோகம் எல்லாமும் உண்டு. வாய்ப்பும் தேட வேண்டும், வயிற்றுக்கும் சோறு வேண்டும் என்று சினிமா சார்ந்து ஏதாவது தொழிலிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். டப்பிங் யூனியன் கார்டு வாங்கினேன். நிறைய விளம்பரங்கள், சிறிய படங்கள், டிவி தொடர்கள் என்று பேசினேன்.


அப்படி வந்த படம் தான் டோரா. இது வந்த படம் அல்ல, தேடிப் பிடித்து வேட்டையாடிய படம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இயக்குநர் தாஸ்ராமசாமி படத்தில் வரும் பாணிபூரி விற்பவன் பாத்திரத்துக்கு ஆள் தேடுவதாக அறிந்து போய் வாய்ப்பு கேட்டேன். அது வட இந்தியாக்காரன் வேடம். இந்தி பேச வேண்டும், நீ தமிழன், திராவிடன் முகமே அதற்கு சரிப்பட்டு வராது என்று தவிர்த்தார். விரட்டாத குறைக்கு என்னை அனுப்பினார். அடுத்த முறை பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தார். அப்போது கையில் ஒரு வட இந்தியாக்காரன் போட்டோ வைத்திருந்தார் அதை மனதில் உள்வாங்கிக் கொண்டேன். எப்படியாவது இந்த வாய்ப்பைப் பெறுவது என்று தீர்மானித்து சில வேலைகளைச் செய்தேன்.


முதலில் தாடி மீசை எல்லாம் மழித்துக் கொண்டேன். அசல் பாணிபூரிக்காரன் போடும் டிஷர்ட் பனியன் பார்த்து அது போல வாங்கி மாட்டிக் கொண்டேன். ஒரு பாணிபூரிக் கடையில் கெஞ்சி அனுமதி வாங்கி சிலருக்குப் பாணிபூரி போட்டுக் கொடுத்தேன். இதையெல்லாம் நண்பர் மூலம் வீடியோவும் எடுத்துக் கொண்டேன். மறுநாளே இயக்குநரைச் சந்தித்த போது அதே தோற்றத்தில் போனேன். இந்தியில் பேசினேன். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை, ஒருவழியாக சமாதானம் ஆகி... நீயே நடி என்றார். இப்படி வந்தது தான். டோரா


இதில் நான் புதிய நடிகன். ஆனால், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எங்களுடன் எளிமையாகப் பழகினார். எந்த ஈகோவும் இல்லாமல் சகஜமாகப் பேசிப் பழகினார். என்னை அடிக்கும் காட்சியில் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் காட்சியில் வலிக்கிறதா என்றார். வலித்தால் சொல்லுங்கள் என்றார் அக்கறையாக... அது எனக்கு வியப்பாக, ஊக்கமாக இருந்தது. ஒரு காட்சியில் பாட்டில் தூள்களைப் போட்டு துணியால் அடிப்பது போன்று வரும். அந்தக் காட்சியில் நடிக்கும் போது மேடம் நிஜமாகவே என் கழுத்தை நெரிங்க செத்தாலும் பரவாயில்லை இந்த படம் எனக்கு முக்கியம் என்றேன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டவர் "நீங்க தாங்கிக் கொள்வீர்கள் என்றால் எனக்கு பிரச்சினை இல்லை" என்று பலம் கொண்ட மட்டும் நெரித்தார். நிஜமாகவே வலித்தது பொறுத்துக் கொண்டேன். இன்று பலரும் பாராட்டும் போது எல்லாம் மறந்து விட்டது" என்கிறார் வெற்றி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in