தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம் நாயகனாக நடித்த முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அந்த படத்தில் யாரேனும் முன்னணி நடிகைகளைத்தான் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்பது சந்தானத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால் அவர் காமெடியன் என்பதை கருத்தில் கொண்டு மார்க்கெட்டில் முன்னணியில் இருந்த நடிகைகள் யாரும் அவருடன் நடிக்க முன்வரவில்லை. அதனால், புனேயில் இருந்து ஆஷ்னா ஜாவேரியை அழைத்து வந்து தனக்கு ஜோடியாக்கிய சந்தானம், அதையடுத்து நடித்த இனிமே இப்படித்தான் படத்திலும் அவரையே ஜோடியாக நடிக்க வைத்தார்.
அதையடுத்து ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த ஆஷ்னா, தற்போது ஆரிக்கு ஜோடியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்து வருகிறார். மேலும், முதல் இரண்டு படங்களில் நடித்தபோது சுத்தமாக தமிழே தெரியாமல் இருந்து வந்த ஆஷ்னா ஜாவேரி , மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தபோது தட்டுத்தடுமாறி தமிழ் பேசத் தொடங்கியவர், தற்போது சரளமாக பேசி வருகிறார்.
விளைவு, ஆரம்பத்தில் சில டைரக்டர்களை சந்தித்து அவர் படவேட்டை நடத்தியபோது தமிழ் தெரியாது என்பதை காரணம் காட்டி தவிர்த்தனர். ஆனால் இப்போது தான் சரளமாக தமிழ் பேசுவதால், அந்த டைரக்டர்களிடம் தமிழில் பேசியே சான்ஸ் கேட்கும் ஆஷ்னா ஜாவேரி, இப்போது நான் தமிழில் பேசுவது மட்டுமின்றி நடிப்பிலும் நல்ல தேர்ச்சி பெற்று விட்டேன். அதனால் எனக்கு கட்டாயம் உங்கள் படங்களில் நடிக்க சான்ஸ் தந்தே ஆக வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்து, துரத்தி வருகிறார் ஆஷ்னா ஜாவேரி.