மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை ஈசிஆர்., ரோட்டில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார். இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பாதுகாப்பாக இருக்கிறேன். உறங்க செல்கிறேன். உதவிய பணியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமலின் மேலாளர் மூர்த்தி கூறியதாவது... ஈசிஆர்., ரோட்டில் உள்ள கமல் வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்த பிரீட்ஜ்ஜில் ஏற்பட்ட தீ, அப்படி பக்கத்து அறையில் இருந்த ஏசி ரூமிற்கும் பரவிவிட்டது. யாரும் எந்த பாதிப்பும் இல்லை, கமல் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.