சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர் வடிவேலு தொடுத்த வழக்கில் வடிவேலு மற்றும் சிங்கத்து ஆகியோரை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது, இல்லையேல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வடிவேலு - சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை மகிழ்வித்த வேளையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.
தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக, தன்னை மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு. இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதோடு வடிவேலு மற்றும் சிங்கமுத்துவை நேரில் ஆஜராக சொல்லி நீதிபதி முரளிதரண் உத்தரவிட்டடிருந்தார். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் வருகிற ஏப்., 20-ம் தேதி வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நேரில் ஆஜராக வேண்டும், இல்லையேல் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கையும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.