நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா தனுஷ், சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்ல அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் எடுத்தார். இந்நிலையில், 63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு சண்டை கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த சண்டை கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்டைகாட்சிக்கான முதல் தேசிய விருதை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக சண்டைகாட்சி அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும்.