ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா தனுஷ், சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்ல அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் எடுத்தார். இந்நிலையில், 63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு சண்டை கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த சண்டை கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்டைகாட்சிக்கான முதல் தேசிய விருதை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக சண்டைகாட்சி அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும்.