அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா தனுஷ், சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்ல அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் எடுத்தார். இந்நிலையில், 63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு சண்டை கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த சண்டை கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்டைகாட்சிக்கான முதல் தேசிய விருதை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக சண்டைகாட்சி அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும்.