தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
“கூட்டிக்கழிச்சு பார்த்தா கணக்கு தப்பா வருதே” என மோகன்லால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மம்முட்டி தரப்பினரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.. விஷயம் இதுதான்.. கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படத்தின் முதல் நாள் வசூல் 4.31 கோடி என்கிற அறிவிப்பு வெளியானது.. இது புலி முருகன் படங்களின் சாதனையை முறியடித்த வசூல் என்பதால், மோகன்லால் ரசிகர்கள் பலருக்கு இதில் வருத்தம்.. இன்னும் சிலருக்கோ இந்த கணக்கில் சந்தேகம்..
அதனால் மோகன்லால் ரசிகர்களில் ஒரு பிரிவினர் மம்முட்டி படம் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கை மற்றும் டிக்கெட் கணக்குகள் ஆகியவற்றில் தாங்களாகவே சில கூட்டல் பெருக்கல் கணக்குகளை போட்டு பார்த்துவிட்டு, சொல்லப்பட்ட வசூல் தொகைக்கும் தாங்கள் கணக்கிட்ட வசூல் தொகைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக சோஷியல் மீடியாவில் செய்தியை பரவவிட்டனர்.. இதனை ஆதாரமாக பிடித்துக்கொண்டு மோகன்லால் ரசிகர்கள் பலரும் 'தி கிரேட் பாதர்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர்.
படத்தின் தயாரிப்பாளர்கள் வேறு யார்..? நம்ம பிருத்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன் மற்றும் அவர்களின் நண்பராஜன் ஷாஜி நடேசன் ஆகியோர்தான். இதனால் இந்த கணக்கு சர்ச்சை குறித்து மற்ற மூவரும் பதிலளித்தால் அது வேறு மாதிரியாக போய்விடும் என்பதால் ஷாஜி நடேசன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.. அதில், “புலி முருகன் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..
அந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. எங்களுடையது வெறும் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சின்ன படம் தான்.. ஆறுமாதம் கழித்து மம்முட்டி படம் வெளியாகி இருப்பதாலும் படத்தை பற்றிய பாசிடிவான கருத்து நிலவியதாலும் தான், ரசிகர்களின் எண்ணிக்கையும் சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையும் கூடுதலாக ஆனது. முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட 51 இடங்களில் மூன்றாம் (இரவு 12 மணி) காட்சிகள் திரையிடப்பட்டன. அதுதான் வசூல் இந்த அளவுக்கு உயர காரணம்” என மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளார் ஷாஜி நடேசன்...