ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'கர்ஜனை'. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சுந்தர்பாலு கூறியதாவது:
இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். 5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதற்கு பின்னணியாக சில பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். நடன கலைஞரான த்ரிஷா, குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறார் என்பதுதான் கதை. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார். பெரும்பகுதி படம் காட்டுக்குள் நடக்கும். த்ரிஷாவை காட்டு கரடி ஒன்று துரத்துவது போன்ற காட்சியை படமாக்கினோம். விலங்கு நல வாரிய பிரச்சினை வரும் என்பதால் கரடியை கிராபிக்சில் உருவாக்கினோம். படப்பிடிப்பு நடக்கும்போது கரடி துரத்துவதாக கற்பனை செய்து கொண்டு த்ரிஷா ஓடவேண்டும்.
அடர்ந்த காட்டுக்குள் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் த்ரிஷா அதிவேகமாக ஓடினார். இதனால் அவர் காலில் முட்கள் கிழித்தும், கற்கள் அழுத்தியும் காயங்கள் ஏற்பட்டது. ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு மீதியை படமாக்கலாம் என்றோம். எப்போது எடுத்தாலும் காயம் படத்தான் செய்யும். காயத்தையும் குளோஸ்அப்பில் எடுத்து பயன்படுத்துங்கள் அப்போதுதான் ரியலாக இருக்கும் என்று சொல்லி நடித்தார். அவரது டெடிகேஷனை பார்த்து வியந்தோம். என்கிறார் இயக்குனர் சுந்தர் பாலு.