ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். எஸ்பிபி 50 என்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் எனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். நான் இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், கிரடிட் கார்ட், பணம், இசை குறிப்புகள் வைத்திருந்த பை காணாமல் போனது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு மாற்று பாஸ்போர்ட் வழங்கியது. இளையராஜாவின் நோட்டீசுக்கு பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கச்சேரிகளுக்கு ஏதோ ஒரு வகையில் இடையூறு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் பரவியது. அவரின் ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் போன் மூலமும், பேஸ்புக் மூலமும், வாட்ஸ்அப் மூலமும் விசாரித்து வருகிறார்கள். இதற்கு பதலிளித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ வெளியீட்டில் பேசியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகள் பறிபோனது குறித்து 'பேஸ்புக்' பக்கத்தில் நான் தகவல் வெளியிட்டு இருந்தேன். இதனால் எனது ரசிகர்கள் பலரும் பெரிய வருத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. நான் அமெரிக்காவில் தவிப்பதாகவும் தகவல் பரவி இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன். எனது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் மூலம் திரும்ப பெற்று விட்டேன். இதுவரை 9 இசை நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து விட்டேன். மீதியுள்ள நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். நான் எதையும் இழந்து விடவில்லை. எல்லோருடைய அன்பையும் பெற்று இருக்கிறேன். எனவே நீங்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். எனக்கு எந்த கெடுபிடிகளும் இல்லை. அனைவருடைய ஆசீர்வாதத்தால் நலமுடன் இருக்கிறேன். இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார் .