ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும் என சென்னையில் நடைபெற்ற விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் உறுதி அளித்தனர்.
கடந்த 2-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றனர். தொடர்ந்து ராகவேந்திரா திருமண மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று ( ஏப்ரல்-6) நடைபெற்றது.
விழாவை விஷாலின் அம்மா ஜானகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை பழைய தயாரிப்பாளர்கள் வழங்கினர்.
விஷாலுக்கு பதினாறு வயதினிலே தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சான்றிதழ் வழங்கினார். அவரை தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் கௌதம் மேனனுக்கு சான்றிதழ் வழங்கினார். பிரகாஷ் ராஜ், எஸ்ஆர்.பிரபு, சுந்தர் சி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு கேடி.குஞ்சுமோன், ராஜ்கிரண், தாணு, கேயார், அழகப்பன், டி.சிவா.... போன்றவர்கள் சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது... இன்றிலிருந்து தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகள் தயாரிப்பாளர் நலனுக்காக 24 மணிநேரமும் உழைப்போம். 60 வயதுக்கு அதிகமான தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் 12500 வழங்கப்படும்.
திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசியை தடுக்க மிஷ்கின் தலைமையில் தனி கமிஷன் அமைக்கப்படும். ஆண்டுதோறும் விருது விழா நடைபெறும். அதன் மூலம் கிடைக்கும் நிதி சங்க நலனுக்கு பயன்படுத்தப்படும். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இந்தாண்டு நடத்தப்படும். திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவது ஆகஸ்டு முதல் இருக்காது.
விவசாயிகளுக்கு உதவி : விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உதவு செய்யப்படும். அதன்படி, தமிழகத்தில் திரையிடப்படும் ஒவ்வொரு படத்தின் அனைத்து காட்சிகளில், ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும். இன்மூலம் பல கோடி கிடைக்கும். இது விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு விஷால் பேசினார்.
விழாவில் பேசிய எடிட்டர் மோகன் ராஜா.. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டிலும் 2 அதிசயங்கள் நடந்துள்ளது, இது சாதாரண விஷயம் இல்லை. விசாலமான மனதுக்கு உரியவர் விஷால். உண்மையான ஹீரோ இவர் தான். மறுமலர்ச்சி ஏற்படும் என நான் நம்புகிறேன், நீங்களும் நம்ப வேண்டும் என்றார்.
சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களும் நேரில் வந்து சால்வை அணிவித்து விஷால் மற்றும் மற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினி வாழ்த்து : இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் வரவில்லை, அவர் சார்பில் வாழ்த்துமடல் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், புதிய நிர்வாகிகளான விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை நிற்பார், என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.