ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியான படம் 'சி 3'. படம் வெளியான முதல் சில நாட்கள் படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. அதற்கடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைந்து படத்தை தோல்விக்கு அழைத்துச் சென்றது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே சூர்யா தென்னிந்திய அளவில் 100 கோடி ரூபாய் வியாபாரமுடைய இயக்குனர் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்கள்.
'சி 3' படம் இதுவரை மொத்தமாக 107 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 44 கோடி ரூபாயும், தெலுங்கு மாநிலங்களில் 16 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களில் 20 கோடியும், வெளிநாடுகளில் 27 கோடி ரூபாய் வரையும் வசூலித்துள்ளது. 100 கோடி ரூபாயை வசூல் கடந்தாலும் தியேட்டர் உரிமைகள் மூலம் செலவு போக 60 கோடி ரூபாய் வரைதான் கிடைத்துள்ளது. ஆனால், 90 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இப்படத்தின் தியேட்டர் உரிமை மூலம் சுமார் 30 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'சி 3' படம் 'சிங்கம்' பட வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த படம். ஆனால், முதல் இரண்டு பாகங்களில் முதல் பாகம் மட்டும்தான் நல்ல லாபத்தைக் கொடுத்த படமாக இருந்தது. புதிய கதை இல்லாததும், முதல் இரண்டு பாகங்களில் பார்த்த காட்சிகள் மூன்றாவது பாகத்திலும் இருந்ததுதான் 'சி 3' படத்திற்கான தோல்வி என்கிறார்கள். தொடர்ந்து 'சிங்கம்' வரிசைப் படங்கள் தொடரும் என்று படத்தின் இயக்குனர் ஹரி வெளியீட்டிற்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில வருடங்களுக்கு அப்படி எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்பதை 'சி 3' உருவாக்கிக் கொடுத்துவிட்டது.