இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் ஆர்யா ஒரு நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் வேலையில், அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'கடம்பன்' படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் கடம்பன் வெளிவருவதற்கு முன்னதாகவே மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் ஆர்யாவிற்கு இரட்டை சந்தோஷத்தை தந்துள்ளது. மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு சமமமான முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு ஹீரோவாக, ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆர்யாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.
இன்னொரு பக்கம் இந்தப்படத்தை தயாரித்த ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற வகையில் படத்திற்கு கிடைத்துவரும் வசூல் ரீதியான வரவேற்பும் ஆர்யாவை சந்தோஷப்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தப்படம், வெற்றிகரமாக ஓடி, தனது ஓட்டத்தை நிறுத்தும்போது சுமார் 200 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என தான் நம்புவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா.