ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவுடன் எந்த விதத்திலாவது தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். தான் நடித்த 'மைத்ரி' படத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் மோகன்லாலை இணைத்துக் கொண்டவர். அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலின் சூப்பர் ஹிட்டான 'ஒப்பம்' படத்தின் கன்னட ரீமேக்கில் கண்பார்வையற்றவராக நடித்து வருகிறார் சிவராஜ்குமார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப்பின் அவர் நடிக்கும் மலையாள ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் விட இன்றைய இளம் நடிகர்களில் தன்னை கவர்ந்தவர் என்றால் அது துல்கர் சல்மான் தான் என்றும் தான் அவரது தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டுள்ளார் சிவராஜ்குமார். இன்றைக்கு வளர்ந்து வரும் புதிய நடிகர்களில் துல்கர் சல்மானை போன்ற திறமையான ஒருவரை நான் பார்த்ததில்லை, அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்களில் அவரது நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது” என பாராட்டியுள்ளார்.