ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1980களில் வலம் வந்த இரண்டாம் வரிசை நாயகிகளில் நித்யா முக்கியமானவர். குடும்ப பாங்கான படங்களில் நடித்தார். மலையாள படத்தில் நடித்த நித்யா குடும்பம் ஒரு கதம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தாவணிக் கனவுகள், குடும்ப சங்கிலி, அலைபாயுதே, பம்பல் கே.சம்பந்தம், உத்தமபுத்திரன் படங்களில் நடித்தார். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் மலையாளத்தில் 50 படங்கள் வரை நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேகா என்ற படத்தில் சிருஷ்டி டாங்கேவின் தாயாக நடித்தார். அதன் பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சரவணன் இருக்க பயமேன் படத்தில் ஹீரோயின் ரெஜினாவின் அம்மாவாக நடிக்கிறார்.
"1987ல் ஒளிப்பதிவாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தேன். அதன் பிறகு யாராவது தேடி வந்து விரும்பி அழைத்தால் மட்டுமே நடித்தேன். என்றாலும் தமிழில் நடிக்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். இடையில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தேன். தற்போது சரவணன் இருக்கே பயமேன் படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறேன். இதுதவிர தொண்டன், ஓநாய்கள் ஜாக்கிரதை படத்திலும் நடித்து வருகிறேன். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் நித்யா.