'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கியபோது, கத்தி என்னுடைய கதை என்று சர்ச்சையைக் கிளப்பியவர் மீஞ்சூர் கோபி. அவர்தான் தற்போது தன்னுடைய பெயரை கோபி நயினார் என்று மாற்றிக்கொண்டு அறம் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக, மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அறம்' விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் நடந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாளன்று வெளியானது. கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ.ரமேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர்தான் தற்போது நயன்தாராவுக்கு மானேஜராக இருக்கிறார்.
இவர் கதை கேட்டு ஓகே சொன்னால்தான்... அடுத்து விக்னேஷ் சிவன் கதையைக் கேட்பார். அவருக்கும் கதை ஓகே என்றால் இறுதியாக நயன்தாரா கதை கேட்பார். இப்படித்தான் அறம் கதையை இவர்கள் ஓகே பண்ணி நயன்தாராவிடம் கொண்டு சென்றுள்ளனர்.
அறம் கதையைக் கேட்டு மிரண்டுபோனதோடு, அந்தப் படத்தை ரமேஷையே தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் நயன்தாரா.
அறம் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் என்று சொல்லப்பட்டாலும், அதன் உண்மையான தயாரிப்பாளர் நயன்தராதான் என கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது. இது உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தான் விளக்க வேண்டும்.