600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
லிங்கா கதை பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார். ரஜினி நடிப்பில் கேஎஸ்ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் படம் ‛லிங்கா'. இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். லிங்கா படத்தின் கதை என்னுடையது. எனது முல்லை வனம் 999 கதையை திருடி தான் லிங்கா படத்தை எடுத்துள்ளனர் என்று ரவிரத்னம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சப்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் நேரில் ஆஜராகி, லிங்கம் படம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்., 21-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.