ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்திரஹாசனின் மறைவையொட்டி அவருக்கு சென்னை காமராஜர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் கமல், ரஜினி, சாருஹாசன், அனுஹாசன், அக்ஷ்ராஹாசன், சுஹாசினி, கேஎஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், இளையராஜா, விஷால், நாசர், அம்பிகா, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரபலங்கள் பங்கேற்று பேசிய விபரம் வருமாறு...
கிரேஸி மோகன் : கமலுக்கு, சந்திரஹாசன் பெரிய தூண், அவர் இல்லாதது கமலுக்கு ஒரு கை உடைந்த மாதிரி தான் இருக்கும். சந்திரஹாசன் அண்ணாவுக்கு சோகம் பிடிக்காது, எப்போதும் சந்தோசமாக இருக்க ஆசைப்படுவார், அண்ணாரின் ஆன்மா வைகுண்டத்தில் சேரும்.
மதன் : சந்திரஹாசன் எப்போதும் அளந்து தான் பேசுவார். அன்பானவர், அவர் உடையில் ஒரு நாகரிகம் இருக்கும். அவரது இழப்பு மிகப்பெரும் வருத்தம்.
ராம்குமார்: சந்திரஹாசன் இழப்பு கமலுக்கு மட்டுமல்ல, திரையுலகுக்கும் பெரிய இழப்பு.
பிரமிட் நடராஜன் : சந்திரஹாசன் மிக அற்புதமான மனிதர். நிர்வாகத்தின் முதுகெலும்பு, திறமையை யூகிக்க முடியாத மனிதர். சந்திரஹாசன் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
கே.எஸ்.ரவிக்குமார் : பலமுறை சந்திரஹாசனை சந்தித்திருக்கிறேன். நேர்மையான அமைதியான மனிதர். அலுவலகத்தின் வருகைப்பதிவில் அவர் கையெழுத்து தான் முதலில் இருக்கும். அவரிடம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்
நாசர் : விருமாண்டி சமயங்களில் சந்திரஹாசன் உடன் பழகி இருக்கேன். சினிமா துறை எளிதான ஒன்று, அதை ஏன் இப்படி கடினமாக்கி கொள்கின்றனர் என்று கேட்பார். அவர் கனவை நான் நிறைவேற்றுவேன்.
விஷால் : சந்திரஹாசன் மிகப்பெரும் தூண். அவரின் இறப்பு மிகப்பெரும் இழப்பு. நாங்கள் எப்பவும் கமல்ஹாசனுக்கு தம்பிகளாக உடன் இருப்போம், தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.
இளையராஜா ஆறுதல் : இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் பங்கேற்றார். சந்திரஹாசனின் படத்திற்கு மரியாதை செய்ததோடு, கமல், சாருஹாசன் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.