பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
கோலிசோடாவுக்கு பிறகு விஜய்மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள வெற்றி பெறாதபோதும், கடுகு படம் வெற்றி பெற்று மீண்டும் அவரை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள டைரக்டர் இராஜகுமாரனும் கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார். அவர் மீதும் நல்லதொரு இமேஜ் விழுந்திருக்கிறது.
இதுகுறித்து இராஜகுமாரன் கூறுகையில், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கடுகு படத்தை சிறப்பான கதையில் இயக்கியிருக்கிறார் விஜய்மில்டன். இந்த படத்தில் நடித்த காரணத்தினால் நானும் இப்போது கவனிக்கப் படும் நடிகராகியிருக்கிறேன். கடுகு படம் பார்த்து விட்டு பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் இந்த பாராட்டெல்லாம் விஜய்மில்டனுக்குத்தான் போய் சேரும். அதேசமயம் எனது நடிப்பு கேரியரில் இது முக்கியமான படம். இந்த படத்தில் கமிட்டானபோது இந்த அளவுக்கு எனக்கு பெயர் வாங்கித்தரும் என்று நான் நினைக்கவில்லை. கோலிசோடா டைரக்டர் என்ற நம்பிக்கையில் நடித்தேன். என்னை பிழிந்து எடுத்து விட்டார் விஜய்மில்டன். அதன் பிரதிபலிப்புத்தான் நான் பேசப்படுகிறேன். என்னை விஜய் மில்டன் பயன்படுத்தியது போன்று மற்ற டைரக்டர்களும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேலும், தற்போது 3 இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, கடுகு நல்லதொரு பெயரை வாங்கித்தந்து விட்டதால் இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதும் எனக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், இந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக கருதுகிறேன். அதை மனதில் கொண்டு புதிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார் டைரக்டர் ராஜகுமாரன்.