ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சரவணன் மீனாட்சி மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சென்னை விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மைனா நந்தினி, தனது கணவர் கார்த்திகேயன் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக சொல்லி, பலரிடம் பணம் வாங்கினார். பின்னர் சொன்னபடி செய்யாததால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் துரத்தி வந்தனர். மேலும், கார்த்திகேயனுக்கு வேறொரு பெண் ணுடன் தொடர்பு இருந்தது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் கார்த்திகேயனை போலீசார் கைது செய்திருந்தனர் என்றும் தனது தரப்பில் கூறியிருந்தார்.
ஆனால் நேற்று போலீசார் நடத்திய விசாரணை யில், தற்கொலை செய்து கொண்ட கார்த்திகேயன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், எனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று எழுதியிருக்கிறார். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின்போது, கார்த்திகேயனை பிரிந்து பெற்றோரிடம் வாழ்ந்து வந்த நந்தினி, அடிக்கடி விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். அதுதான் கார்த்திகேயனின் தற்கொலைக்கு காரணம் என்று கார்த்திகேயனின் சகோதரி ரம்யா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.