‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ரூ.2.18 கோடி மோசடி செய்தது தொடர்பாக ஜே.கே.ரித்திஷ், அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஜே.கே.ரித்திஷ்,
சென்னையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் முன்னாள் எம்பியும்., நடிகருமான ஜேகே ரித்திஷ் ரூ.2.18 கோடி பணத்தை வாங்கி கொண்டு மோசடி செய்ததாக கூறினார். இந்த புகார் ஏற்று கொள்ளப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ரித்திஷ். ஆனால் குற்றச்சாட்டு போதிய ஆதாரம் இல்லை என்றும் 2015ம் ஆண்டு நவம்பரிலேயே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பு வக்கில் கூறினார். ஆனால் இதை நீதிபதி ஏற்கவில்லை, உடனடியாக ரித்திஷ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கோர்ட்டும் உத்தரவிட்டு வழக்கு பதிவு செய்யாததால் ஆதிநாராயணன், போலீஸ் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட் எச்சரித்தது. இதையடுத்து, நடிகர் ரித்திஷ், அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குபதிவு செய்தனர்.